
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல், வரலாற்று சின்னங்கள், கட்டிடங்களை பாதுகாக்க புதிய ஆணையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக, பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்துள்ளது என கடந்த ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாகவும் பெருமிதமாக தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தொல்லியல், வரலாறு மற்றும் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்காக புதிதாக ஒரு ஆணையத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.