
பெங்களூரு: ‘ஹார்ட் லாம்ப்' சிறுகதை தொகுப் புக்காக கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் சர்வதேச அளவில் புகழ்பெற்ற‌ புக்கர் விருதை வென்றுள்ளார். இந்த விருது முதல் முறையாக சிறுகதை தொகுப்புக்காக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பானு முஸ்தாக் சிறுவயதில் இருந்தே வாசிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தனது தந்தையின் வாயிலாக நூல்களின் அறிமுகத்தை பெற்ற அவர், கல்லூரி காலத்தில் சிறுகதைகள் எழுத தொடங்கினார்.
1990 முதல் 2023-ம் ஆண்டு வரை அவர் கன்னடத்தில் எழுதிய சிறுகதைகள் ‘ஹார்ட் லாம்ப்’ (இதய விளக்கு) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளிவந்தது. இதனை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். தற்போது இருவருக்கும் சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.