
மதுரை: மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துகளை விற்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, டான்பிட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி, ஏ.பரமசிவம், ஜி.சிவக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.