• May 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *