
கம்பம்: முதல்போக நெல் சாகுபடிக்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வயல்களை தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் இரண்டாம் போக சாகுபடி முடிந்தது. இதனைத் தொடர்ந்து சிதறி கிடக்கும் நெல்மணிகள், வைக்கோலை அகற்றுவதற்காக வயல்கள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. வாத்து, ஆடு, மாடுகள் இவற்றை தீவனமாக பயன்படுத்தின.