
திருவனந்தபுரம்: மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் அமைச்சர் வீணா ஜார்ஜ், “தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகின்றன. மேலும் கேரளாவிலும் கரோனா அதிகரிப்புக்கான வாய்ப்பு உள்ளது. தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலும், தற்காப்பு முக்கியமானது.