• May 22, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன்.

இவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், விஷம் அருந்திய நிலையில் பாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சில டாஸ்மாக் அதிகாரிகளைக் குறிப்பிட்டும், காவல்துறையைச் சேர்ந்த சிலரைக் குறிப்பிட்டும், அவர்கள் தன்னிடம் பணம் வாங்குவதாகவும், அப்படிப் பணத்தைக் கொடுத்தாலும் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற பாலகிருஷ்ணன்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் அதிகாரிகளும், போலீஸாரும் கூடுதல் பணம் கேட்டு தன்னிடம் டார்ச்சர் செய்ததாக குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *