• May 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் உள்ள 1.75 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணமாக தலா ரூ.8,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரம் விசைப்படகுகள், இழுவை படகுகள் கடலுக்கு செல்வது இல்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *