• May 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆயுதங்களுடன் ஊடுருவினாலோ, கொள்ளையில் ஈடுபட்டு தப்பினாலோ குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்வது எப்படி என சென்னையில் போலீஸார், முதன்முறையாக கொள்ளை தடுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால், குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு முன்னர், போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொள்ளை தடுப்பு ஒத்திகை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *