• May 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய குஜராத்தின் முதல் பெண் நீதிபதி பேலா எம்.திரிவேதி ஓய்வு பெற்றார். குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, கடந்த 2021, ஆகஸ்ட் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் 7-வது பெண் நீதிபதியான பேலா, குஜராத்திலிருந்து இப்பதவியை பெற்ற முதல் பெண் ஆவார். உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதற்காக பாராட்டப்படுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான அரசியல் சாசன அமர்வுகளிலும் இவர் இடம்பெற்றிருந்தார். கடந்த 2019-ல் கொண்டுவரப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துகு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதில் அந்த சட்டம் செல்லும் என நவம்பர் 2022-ல் (3: 2) தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி பேலாவும் இடம்பெற்றிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *