
சென்னை: நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் கடன் திட்ட இலக்கு ரூ.9 லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வங்கிகள் அதிக முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழுவின் 182-வது கூட்டம், குழு ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார்.