
புதுடெல்லி: பாஜக தலைமையிலான டெல்லி அரசு, ஆண்டுதோறும் எம்எல்ஏக்களுக்கு வழங்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியது. அதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவால் தோற்கடிக்கப்பட்டது.