
புதுடெல்லி: தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் நமஸ்தே என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.