
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம் மிஸ்ரி இன்று விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜகவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.