
சென்னை: சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர், ஓட்டுநர் ஆகியோர் பயணித்தனர்.