
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று செலுத்தும் செயற்கைக்கோள் மூலம் இரவுநேர கண்காணிப்பு திறன் அதிகரிக்க உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புதிய ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் 1,696 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இதனை விண்ணில் செலுத்தியது.