
பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் முறையே, ராமர், சீதை, ராவணனாக நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளார். அவர் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் வேறுநடிகை நடிப்பதாக இருந்தது. காஜல் அகர்வால் தென்னிந்தியாவிலும் பிரபலமாக இருப்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.