• May 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர்.

காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. இந்திய படைகள் தனது அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் அவை அனைத்தையும் நடுவானிலேயே தகர்த்து அழித்தது. இந்த மோதல் ஒருசில நாட்கள் நீடித்த நிலையில், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *