
ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறது. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கைக்கு, நீண்ட அறிக்கையின் மூலம் பதில் அளித்திருந்தார் நடிகர் ரவி மோகன். தற்போது ஆர்த்தி ரவியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
“கடந்த 25 வருடங்களாக திரைப்படத் துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இந்தத் துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தனை ஆண்டுககளில் பட வெளியீட்டின்போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்.