
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் கற்றுக்கொண்டது குறித்து அர்ச்சனா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. தற்போது திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இது தொடர்பாக அர்ச்சனா கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. எனது முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது.