
பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது மிகவும் அபூர்வம். அதுவும் ஒரு லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
மும்பையில் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. அக்குழந்தைகளைப் பெற்றோர் கைவிட்டனர்.
இதையடுத்து மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை நிர்வாகம் அக்குழந்தைகளை இரண்டாகப் பிரித்து மருத்துவமனையிலேயே வளர்த்து வருகின்றனர்.
இப்போது அது போன்று மேலும் ஒரு இரட்டையர்கள் ஒட்டிப் பிறந்துள்ளனர். மும்பை காந்திவலியில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் ரஞ்சனா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகப் பதிவு தன்னைச் செய்து வைத்திருந்தார்.
அவர் கர்ப்பமாகி 7 மாதங்கள் கடந்த பிறகுதான் மருத்துவமனைக்கே வந்தார். அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.
எந்த வித அசாதாரணமும் தென்படவில்லை. அப்பெண் தனியார் மருத்துவமனை ஒன்றிலும் ஸ்கேன் செய்து பார்த்தார். இரண்டிலும் குழந்தைக்கு எந்தவித பிரச்னையும் இருப்பதாகத் தென்படவில்லை.
திடீரென ரஞ்சனாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அப்பெண்ணிற்கு சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்தனர்.
குழந்தையைப் பார்த்ததும் டாக்டர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். குழந்தை இரண்டு தலையுடன் நெஞ்சுப்பகுதி ஒட்டிய நிலையில் இரட்டையர்களாகப் பிறந்திருந்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனைக்கு அக்குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அக்குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு டாக்டர் பராஸ் கோத்தாரி கூறுகையில், ”குழந்தையின் உள் உறுப்புகள் எப்படி இருக்கிறது என்பதை முதலில் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.
அதன் பிறகுதான் ஆப்ரேஷன் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb