• May 17, 2025
  • NewsEditor
  • 0

பயோபிக் பட விவகாரத்தில், ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்துக்கு மட்டுமே ஆதரவு என்று தாதா சாகேப் பால்கேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமாகக் கருதப்படும் ‘ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு இயக்கியவர். இவர் வாழ்க்கைக் கதையைத் தழுவி, ‘மேட் இன் இண்டியா’ என்ற தலைப்பில் படம் உருவாக இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வருண் குப்தாவும் எஸ்.எஸ். கார்த்திகேயாவும் இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாதா சாகேப் பால்கேவாக ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *