• May 17, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புனேவில் ஐஇடி தயாரித்தது, சோதனை செய்தது தொடர்பான 2023-ம் ஆண்டு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தேடப்பட்டு வந்தனர். கைதானவர்கள் அப்துல்லா ஃபைஸ் சேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து இந்தியா திரும்பியபோது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *