
புதுடெல்லி: “தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை குறித்து ஐ.நா.பாதுகாப்பு குழு உறுப்பு நாடுகள் மற்றும் முக்கியமான நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்க செல்ல இருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதற்கு சசி தரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.