
புதுச்சேரி: புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவனின் பெற்றோருக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு யாரோ ஒருநபர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் சம்மந்தப்பட்ட எண்ணை அழைத்தபோது தொடர்பு கொள்ள முடியவிலை. இதையடுத்து அந்த எண்ணை கொண்டு போலீஸார் முகவரியை கண்டறிந்தனர். உடனே அந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.