
ஆண்டிபட்டி: தேனி மாவட்ட ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
தேனி மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து பல வாரங்களாகியதால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மூல வைகையைப் பொறுத்தளவில் பல வாரங்களாக வறண்ட நிலையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதியில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.