
சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை முதல்வர், தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி
கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.