
அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றுபட்ட நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திச்செல்வன் தான் இருந்தார். ஸ்டாலினின் தீவிர விசுவாசியான இவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாலோ என்னவோ 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக காந்திச்செல்வன் அறிவிக்கப்பட்டார்.