
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் (15-ம் தேதி) வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் கடிதங்கள் பெறப்படும் என ஆந்திர மாநில இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் முக்கிய புள்ளிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் விஐபி பிரேக் தரிசனம் வாயிலாக தரிசித்து வருகின்றனர். இவ்வாறு தினமும் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமியை தரிசிக்கின்றனர்.