• May 14, 2025
  • NewsEditor
  • 0

கோவை: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நியாய​மான தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ள​தாக சிபிஐ தரப்பு வழக்​கறிஞர் சுரேந்​திர மோகன் கூறி​னார். கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இந்த வழக்​கில் 376டி (கூட்டு பாலியல் வன்​கொடுமை) மற்​றும் 376 (2)என் (தொடர்ச்​சி​யாக பாலியல் வன்​கொடுமை புரிதல்) ஆகிய பிரிவு​களில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. சிபிஐ முயற்சி வீண் போக​வில்​லை.

பாதிக்​கப்​பட்ட பெண்​கள், வழக்​கின் தன்​மை, பாதிப்பு ஆகிய​வற்றை கருத்​தில் கொண்​டு, நீதி​மன்​றம் நியாய​மானத் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது. இவ்​வழக்​கில் அழிக்​கப்​பட்ட சில மின்​னணு ஆவணங்​கள் தொழில்​நுட்ப வல்​லுநர்​களால் மீட்​டெடுக்​கப்​பட்​டன. சாட்​சிகள் சிபிஐ தனிக் குழுக்​கள் மூலம் ரகசி​ய​மாக விசா​ரிக்​கப்​பட்​டனர்​.உயர்​நீ​தி​மன்ற உத்​தர​வின்​படி 8 வழக்​கு​கள் ஒன்​றாக விசா​ரிக்​கப்​பட்​டன. வழக்​கில் விசா​ரிக்​கப்​பட்ட 48 சாட்​சி​யங்​களில் யாரும் பிறழ் சாட்​சி​யாக மாற​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *