• May 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் இல்லாததால் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு படியேறி செல்ல வேண்டிய நிலையுள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் தினசரி 300-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இவற்றில் பயணம் செய்கின்றனர்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய இரு வழித்தடங்களில் உள்ள கோட்டை ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக திகழ்கிறது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பாரிமுனைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *