
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.