
புதுச்சேரி: “என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளில் இருந்து முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையே மாநில அந்தஸ்துதான். எனவே அதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கால்நடை மருத்துவம், பொறியியல், நர்சிங், கலை, அறிவியல், வேளாண், சட்டம் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளின் சேர்க்கைக்கு சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (மே 12) முதல் வரும் 31-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் சிற்றேடு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.