• May 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 23-ம் தேதி நடைபெறும் காணொலி விசாரணையில் ஆஜராகும்படி, வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டு இவரை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *