
சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இந்திய அரசுக்கு பாராட்டுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவம், போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.