• May 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவமனைகளுக்கு 16 புதிய கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டதோடு, 13 புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கோவி.செழியன் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறந்து வைத்து, ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *