
இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், ‘அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?’ என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நான் உலகிற்குச் சொல்லிக் கொள்கிறேன். இது பிராந்தியங்களுக்குள் மட்டும் முடிந்துவிடாது. இது இன்னும் பரந்ததாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கலாம்.
அணு ஆயுதப் பயன்பாடு வாய்ப்பு இருக்கிறது என்று பேசுகிறீர்கள். அதுகுறித்து இப்போது பேச வேண்டாம். அதைத் தொலைதூர சாத்தியமாகக் கருதலாம். இப்போது அது குறித்து நாம் விவாதிக்கக் கூடக் கூடாது.
அந்த நிலைமைக்குச் செல்வதற்கு முன்பே, இந்த நிலைமை தணிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். தேசிய கட்டளை ஆணையத்தின் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. நடப்பதாகவும் திட்டமிடப்படவில்லை” என்று பதிலளித்துள்ளார்.
இன்று இந்திய வெளியுறவுத் துறையின் நேரலையில், இந்திய அதிகாரிகளும், ‘பதற்ற நிலை முடிவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று பேசியிருந்தார்கள்.
இரு நாடுகளுமே இப்போது ‘பதற்ற நிலை குறைய வேண்டும்’ என்று பேசுவது, ‘பதற்ற நிலை முடிவுக்கு வரலாம்’ என்கிற நம்பிக்கை ஒளியைத் தருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs