
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், 2 புதிய முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.