• May 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்​திய ராணுவத்​தின் வீரத்தை போற்​ற​வும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​தும் வகை​யிலும் சென்னை மெரி​னா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் இன்று மாலை பேரணி நடை​பெற உள்​ளது. இதில் பங்​கேற்​கு​மாறு மக்​களுக்கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து முதல்​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பாகிஸ்​தானின் அத்​து​மீறல்​கள், தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு எதி​ராக வீரத்​துடன் போர் நடத்தி வரும் இந்​திய ராணுவத்​துக்கு நமது ஒன்​று​பட்ட ஒற்​றுமை​யை​யும், ஆதர​வை​யும் வெளிப்​படுத்த வேண்​டிய தருணம் இது. அதை வெளிப்​படுத்​தும் வகை​யில், சென்னை மெரி​னா​வில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​தில் இருந்து எனது தலை​மை​யில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடை​பெறும். தீவுத்​திடல் அருகே உள்ள போர் நினைவு சின்​னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *