திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில் பேசியது: “கடந்த நான்காண்டுகளில், சிறுபான்மையின மக்களுடைய சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறோம். அண்மையில்கூட, நங்கநல்லூரில் ‘தமிழ்நாடு ஹஜ் இல்லம்’ கட்டப்படும் என்று அறிவித்தேன். பலரும் என்னிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *