
புதுடெல்லி: லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா அளித்து வரும் பதிலடி குறித்து இன்று (மே 8) செய்தியாளர்களிடம் விவரித்த கர்னல் சோபியா குரேஷி, "இன்று காலை இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியாவின் பதிலடியும் அதே தீவிரத்தில் உள்ளது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பும் அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது.