
புதுடெல்லி: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையே போட்டி நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த மைதானம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.