
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசினார்.