
புதுடெல்லி: கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.