
சேலம்: “சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.