
இந்திய ராணுவ தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அவருடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது.