
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக பாகிஸ்தான் மீது மேக்தூத், விஜய் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.