
திருப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கூறினார். கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. தேசியச் செயலாளர் நாராயணா தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி. முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலாளா் பொியசாமி, வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், தேசியச் செயலாளர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: