பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது.

பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நேற்று 24 தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் ஸ்கால்ப் மற்​றும் ஹேமர் வகை ஏவுகணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதில் ஸ்கால்ப் ஏவு​கணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்​களில் இந்த ஏவு​கணையை பொருத்த முடி​யும். இந்த ஏவு​கணை தொலை தூர இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்​கும். இந்த ஏவு​கணையை எம்​பிடிஏ என்ற ஐரோப்​பிய நிறு​வனம் தயாரிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *