நாகர்கோவில்: சித்ரா பவுர்ணமியான வரும் 12-ம் தேதி மாலையில் கன்னியாகுமரியில் சூரியன் மாலை நேரத்தில் மறையும் காட்சியையும், அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சியையும் காணலாம். இவ்விரு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் அபூர்வத்தை குமரியிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காண முடியும்.

கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் மறைவதையும், அதே நேரத்தில் கிழக்கே வங்கக் கடல் பகுதியில் பூரண சந்திரன் உதயமாவதையும் காணலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *